சின்னகண்ணன் சிரிக்கிறான் . தேவகியின் மைந்தனாக அவதரித்து பூமியில் தீயசக்தி அழிவதற்கு மழலையுறு எடுத்தவன் மூவலகின் தேவனான நாரணனின் உருவென மூதறிவு ஞானிகளும் மொழிந்தனரே கதைகளாய் பூவுலகில் அசுரனாக உழன்றுவந்த கம்சனும் பந்தபாசம் விடுத்துதன் சுயநலமே பெரிதென சேவகரின் காவலிலே சோதரியை வைத்தவன் சேயெட்டு பிறந்ததுமே கொல்லஆணை யிட்டனன் . மகவேழு பிறந்ததுமே தானேகொன்று மகிழ்ந்தனன் எட்டாவது மகவைவசு தேவர்தூக்கிச் சென்றதும் தகவுடனே மாயாதேவி அவ்விடத்தே இருக்கவும் தயையில்லாக் கம்சனதைக் கொல்லவுமே தூக்கவும் நகையொலிக்க மாயாதேவி வானில்சென்று மறையவும் நடுக்கமுற்ற மாமன்மேலும் பயத்தால் கோபமுற்றனன் . மகன்மருகன்...
கருத்துகள்
கருத்துரையிடுக